Powered by Blogger.
RSS

ஓட்ஸ் ரவா தோசை oats dhosa

  • ஓட்ஸ் - ஒரு கப்  
  • அரிசி மாவு– ¼ கப் 
  • ரவை– ¼ கப்
  • தயிர்- ஒரு கப்
  • உப்பு-தேவைக்கு





ஓட்ஸ் மற்றும் ரவையை இரண்டு கப்பு தண்ணீர் மற்றும் தயிருடன் சேர்த்து   குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் வரை
ஊற வைக்கவும்.




ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை  தேவையான அளவு உப்பு சேர்த்து  மிக்ஸ்சியில் ஒரு சுற்றுவிட்டு அரைக்கவும்.







அத்துடன் அரிசி மாவு சிறுக சிறுக சேர்த்து கலக்கவும்.




தோசை மாவு பதத்திற்கு கலக்கி விட்டு  அரை மணி நேரம் ஊறவிடவும்.
பின் தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊற்றி நடுவில் கொண்டு வர வேண்டும். மாவும் தண்ணீர் போல் இருப்பதால்  தானாக நடுவில் வந்து கூடிவிடும். எண்ணெய் விட்டு வார்த்து திருப்பி போட்டு எடுக்கவும்.




மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி
. இதில் வெங்காயம், சீரகம், கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து கலந்தும் அடை போல் செய்து சாப்பிடலாம்.




இக்குறிப்பை எனக்கு  கற்றுதந்த யாஸ்மின்க்கு என் மனமார்ந்த நன்றி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கறிவேப்பிலை சாதம்

தேவைப்படும் பொருட்கள்
சாதம்- 2 கப்
நெய்-2 ஸ்பூன்
எண்ணெய்- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை- கால் கப்
வெங்காயம்-1
பூடு- 10 பல்
வரமிளகாய்-4
உளுந்து- 4 ஸ்பூன்
கடலைபருப்பு-4 ஸ்பூன்
சீரகம்- கால் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
முந்திரி- 10
கடுகு- அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு




கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.



அதே நெய்யில் பூடு, வரமிளகாய், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.





ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.





கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும்.




நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.



பின் சாதத்தை கொட்டி வதக்கவும். பின்னர் பொடியை தூவி ஒரு சேர கிளறவும். இறக்கும் போது முந்திரி சேர்க்கவும்.





எளிமையாக செய்து முடிக்க கூடிய கறிவேப்பிலை சாதம் தயார்.




பின் குறிப்பு:

எளிமையாக செய்து முடிக்கலாம். பொடியை அதிகமாக செய்து வைத்து ப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டால் அவ்வபோது உடனடியாக செய்து விடலாம்

தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். படத்தில் காட்டியிருப்பது மாசி தொககு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலிப்ளவர் பிரியாணி


தேவைப்படும் பொருட்கள்

பாஸ்மதி - அரைகிலோ
நெய்- 3 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி- முறையே 1,2,3,2
தயிர்- 100 கிராம்
தக்காளி விழுது-200 கிராம்
வெங்காயம்-  2
கொத்தமல்லி- அரை கப்
புதினா- அரை கப்
உப்பு- தேவைக்கு
பிரியாணி தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பச்சைமிளகாய் -2

காலிப்ளவர் பொரிக்க:
காலிப்ளவர்- நார்மலான சைஸில் ஒன்று
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
அஜினோ மோட்டோ- கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுந்து - 2 ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு கைப்பிடி
எண்ணெய்- 100 கிராம்



பாஸ்மதியை  தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து பாதி வேக்காட்டிலேயே வடித்துவிடவும்.



எண்ணெய் தவிர காலிப்ளவர்க்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து  கலந்துக்கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.




எண்ணெய் சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும்.




கடாயில் நெய் விட்டு வாசனை பொருட்கள் சேர்த்து பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.




பின்னர் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.



அதில் பிரியாணி தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.




தக்காளி விழுந்தையும் தயிரையும் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிய வதக்கவும்.




கொத்தமல்லி, புதினா சேர்த்து பாதியாக  வதங்கும் வரை வதக்கவும்.




பொரித்த பூக்களை சேர்த்து 1 நிமிடம் மட்டும் வைத்திருந்து பின் இறக்கவும்.




சாதத்தில் கொட்டி மூடியிட்டு லேசாக குலுக்கி விட்டு  10 நிமிடங்கள் தம்மில் போடவும்.




பிரியாணி தயார். ரைத்தா உடன் பரிமாறவும். அசைவ கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS