Powered by Blogger.
RSS

காலிப்ளவர் பிரியாணி


தேவைப்படும் பொருட்கள்

பாஸ்மதி - அரைகிலோ
நெய்- 3 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி- முறையே 1,2,3,2
தயிர்- 100 கிராம்
தக்காளி விழுது-200 கிராம்
வெங்காயம்-  2
கொத்தமல்லி- அரை கப்
புதினா- அரை கப்
உப்பு- தேவைக்கு
பிரியாணி தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பச்சைமிளகாய் -2

காலிப்ளவர் பொரிக்க:
காலிப்ளவர்- நார்மலான சைஸில் ஒன்று
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
அஜினோ மோட்டோ- கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுந்து - 2 ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு கைப்பிடி
எண்ணெய்- 100 கிராம்



பாஸ்மதியை  தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து பாதி வேக்காட்டிலேயே வடித்துவிடவும்.



எண்ணெய் தவிர காலிப்ளவர்க்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து  கலந்துக்கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.




எண்ணெய் சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும்.




கடாயில் நெய் விட்டு வாசனை பொருட்கள் சேர்த்து பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.




பின்னர் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.



அதில் பிரியாணி தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.




தக்காளி விழுந்தையும் தயிரையும் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிய வதக்கவும்.




கொத்தமல்லி, புதினா சேர்த்து பாதியாக  வதங்கும் வரை வதக்கவும்.




பொரித்த பூக்களை சேர்த்து 1 நிமிடம் மட்டும் வைத்திருந்து பின் இறக்கவும்.




சாதத்தில் கொட்டி மூடியிட்டு லேசாக குலுக்கி விட்டு  10 நிமிடங்கள் தம்மில் போடவும்.




பிரியாணி தயார். ரைத்தா உடன் பரிமாறவும். அசைவ கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Unknown said...

அருமையாக இருக்கு

Post a Comment