Powered by Blogger.
RSS

கொத்து புரோட்டா

தேவையான பொருட்கள்
புரோட்டா-2
முட்டை-1
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
உப்பு-தேவைக்கு
என்ணெய்-4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா- 1 1/2 குழிகரண்டி
பூடு-8 பல்
கறிவேப்பிலை- ஒரு கொத்து






புரோட்டாவை கையால் பிய்த்துக்கொள்ளவும்.




வெங்காயம், தக்காளி, பூடு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்,





கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் மற்றும் பூடு சேர்த்து தாளிக்கவும்.




பூடு நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் முட்டை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.





அதன் பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




அதில் சால்னா அல்லது கிரேவி சேர்த்து ஒருசேர கிளறவும்.தேவைக்கு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.





சால்னா ஒருசேர சுருண்டதும் புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி பிரட்டவும்.




கொத்து புரோட்டா தயார். 
(கடைகளில் கொத்துவது போல் தோசைகரண்டி மூலமும் கொத்தலாம். அடுப்பு உடைந்து போனால் பஞ்சாயத்துக்கு வரக்கூடாது :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பீர்க்கங்காய் காராமணி குழம்பு

தேவைப்படும் பொருட்கள்
பீர்க்கங்காய்- ஒரு கப்
காராமணி(தட்டைபயறு/ருதியா/அல்சந்தர்;-)-50 கிராம்
புளி- நெல்லிக்காய் அளவு
புளிகுழம்பு தூள்- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
பச்சைமிளகாய்-3
கறிவேப்பிலை-ஒருகொத்து
பூடு- 20 பல்
உப்பு-தேவைக்கு
கடுகு,உளுந்து- ஒரு ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2







காராமணியை 6 மணிநேரம் ஊறவிடவும்






குக்கரில் உப்பு சேர்த்து முக்கால் பாகம்  அளவுக்கு வேகவைத்து வைக்கவும்.



கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து தாளிக்கவும்.பின்னர் பூடு, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.




 நறுக்கிவைத்த பீர்க்கங்காய் துண்டு, தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.



பீர்க்கங்காய் பாதியளவு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்க்கவும். அதன் பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.




தக்காளி குழைந்ததும்  புளிகுழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.



பின்னர் ஊற வைத்த புளியில்  தேவைக்கு ஏற்ப நீர் சேர்த்து  கரைத்துக்கொள்ளவும். அதை மசாலாவில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.




காராமணியை  வேக வைத்த நீருடனே சேர்த்து மசாலா வாசனை நீங்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் இறக்கவும்.



சுவையான பீர்க்கங்காய் காராமணி குழம்பு தயார். ஆம்லேட், பொரியல்,கீரையுடன் அருமையாக இருக்கும்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆப்பம்


கண்டிப்பா எல்லாருக்கும் இத எப்படி செய்யணும்னு தெரிஞ்சுருக்கும். தெரியாதவர்களுக்காக....

பச்சரிசி-2 டம்ளர்
புழுங்கல் அரிசி-1 டம்ளர்
உளுந்து- அரை டம்ளர்
வெந்தயம்- கால் ஸ்பூன்
தேங்காய்-கால் மூடி
சாதம்- கால் கப்
சோடா உப்பு-சிறிதளவு
உப்பு-தேவைக்கு
தேங்காய் தண்ணீர்- தேவைக்கு

அரிசி வெந்தயம் சேர்த்து 4 மணி நேரமும் உளுந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.  கிரைண்டரில் தேங்காய், சாதம் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். அரிசியை சேர்த்து ஆட்டி ரவைபோல் வந்ததும் தனியே எடுத்துவைக்கவும். உளுந்தை மைபோல் அரைத்து எடுக்கவும். அனைத்தையும் உப்பு மற்றும் சோடா உப்பு கலந்து 8 மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் தோசைமாவைவிட நீர்த்திருக்கும் பதத்தில் இருக்க தேவைக்கு தகுந்தது போல் தேங்காய் நீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்னர் ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து துணிகொண்டு எண்ணெய் தடவி நன்கு சூடானதும் 1 1/2 குழிகரண்டி மாவு விடவும்
 
 இரு கைப்பிடிகளையும் பிடித்து எல்லா இடங்களிலும் பரவிவிடவும்
 ஓரங்களில் லேசாக மாவு பட்டால் போதும். மீதம் மாவு நடுவில் வந்து நிற்கும்.

வேகும் வரை மூடிவைக்கவும். ஓரங்கள் நன்கு சிவந்ததும் லேசாக கரண்டி கொண்டு ஓரங்களில் எடுத்துவிட்டு பின்னர்  தட்டில் எடுத்துவைக்கவும்.
ஆப்பம் தயார். தேங்காய் சட்னி, தாளிச்சா, சாம்பார், ஆகியவை நல்ல காம்பினேஷன்.










டிப்ஸ்
ஆப்பம் வார்த்த பின் எண்ணெய் விடவேண்டாம். ஆங்காங்கே திட்டுதிட்டாக நிற்கும்.

முதல் நாள் மதியம் ஊறவைத்து சாயங்காலம் கிரண்டரில் ஆட்டினால் அடுத்த நாள் காலையில் டிபனுக்கு உபயோகிக்கலாம்:-)

ஆப்பம் சுடப்போகும் போது தேங்காய் நீர் சேர்க்கவும்.

தண்ணீருக்கு பதில் தேங்காய் நீர் சேர்த்து கரைத்தால் சுவை அதிகமாகும். உடைக்கும் தேங்காயின் நீரை பிரிட்ஜில் சேமித்து வைத்தால் இதுபோல் உபயோகித்துக்கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆனியன் ரைஸ்


செய்முறை விளக்கம் காண அறுசுவை செல்லவும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

டொமெட்டோ ரைஸ்



செய்முறை விளக்கம் காண இங்கே கிளிக்கவும்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெங்காய பாவற்காய் பொரியல்



செய்முறையை விளக்கப்படத்துடன் காண அறுசுவை பார்க்கவும்

பாட்டியின் சமையல் இது ;-) கசப்பு தெரியாது இந்த முறையில் செய்யும் போது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க (7 வயசுல இருந்தே இதை சாப்பிட்டிருப்பதால் சொல்கிறேன் ;-)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காஜர் ரைஸ்



செய்முறை விளக்கப்படத்துடன் காண  இங்கே கிளிக்கவும்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிக்கன் லேயர் பிரியாணி




தேவைப்படும் பொருட்கள்
பாஸ்மதி அல்லது சீரகசம்பா- அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது-4 ஸ்பூன்
சிக்கன் - அரைகிலோ
வெங்காயம்-3
தக்காளி-5
பச்சை மிளகாய்-3
பிரியாணி பொடி-50 கிராம்
தயிர்-ஒரு கப்
கொத்தமல்லி-அரை கப்
புதினா-அரைகப்
உப்பு-தேவைக்கு
எலுமிச்சை சாறு-3
ஆரஞ்ச் கலர்- சிறிதளவு
நெய்- 3 குழிகரண்டி

செய்முறை:-
சிக்கனை சுத்தம் செய்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். பச்சைமிளகாயின் காம்பு மட்டும் நீக்கவும். எலுமிச்சை சாறு எடுத்து தயாராக வைக்கவும். புதினா கொத்தமல்லி நறுக்கி வைக்கவும்.
அரிசியை உப்பு சேர்த்து அரைவேக்காடாக வடித்து வைக்கவும். பின் தனியாக ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். இவ்வாறு செய்தால் இன்னும் ஒட்டாமல் உதிரியாக வரும்.
நெய்யில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறியதும் கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும். சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு வாசனை போனதும் தக்காளியை சேர்த்து உடைக்காமல் கிளறவும்.
பின்னர் பிரியாணி பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
பின்னர் ஊற வைத்த சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை மிதமான தீயிலேயே வேகவிடவும். இறைச்சி விடும் நீரே போதுமானது. தேவைப்பட்டால் மட்டுமே நீர் சேர்க்கவும்.
சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் எலுமிச்சை சாறு கலந்து 2 நிமிடம் கிளறி விட்டும் பின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சாதம் சிறிதளவு கொட்டவும். அதற்கு மேல் சிக்கன் கிரேவியை சிறிதளவு சேர்க்கவும். கொத்தமல்லி புதினா தூவவும்.இப்படியாக சாதம் முடியும் வரை அடுக்கடுக்காக செய்யவும்.
கடைசியாக மேலே சாதம் வரும்படி லேயர் உருவாக்கி   சாதத்தின் மேல் ஆரஞ்ச் பொடி கலந்த நீரை ஆங்காங்கே ஊற்றவும். அல்லது வட்ட வடிவில் ஊற்றவும். பின் இதனை 5 நிமிடம் தம்மில் வைக்கவும்.
இறக்கும் போது நன்கு மூடியிட்டு ஒரு முறை மேலே உள்ள சாதம் கீழிறங்கும் படியாக குலுக்கவும். அவ்வளவு தான் லேயர் சிக்கன் பிரியாணி தயார். எள்கத்திரிக்காய் கிரேவி, வெங்காய ரைத்தா உடன் பரிமாறவும்.






கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:-

  • கடைகளில் விற்கும் பிரியாணி பொடி உபயோகிக்கலாம். இல்லையேல் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,etc முதலிய வாசனை பொருட்களை பொடி செய்து அத்துடன் மிளகாய் தூளும் சேர்த்து வதக்க வேண்டும். 
  •  அவ்வாறு வீட்டிலேயே பொடி செய்வதாய் இருந்தால் நேர்பட்டையை உபயோகிக்கவும்.சுருள் பட்டையை விட நேர்பட்டை வாசம் கொடுக்கும். 
  • பட்டையை லேசாக ஓரத்தில் கடித்தால் இனிப்பு சுவையுடன் சட்டென காரத்தன்மை கொடுத்தால் அது தான் தரமான பட்டை வகை. அப்படியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
  • அடிக்கடி கரண்டி உபயோகிக்க வேண்டாம். சாதம் உடைந்துவிடக் கூடும். 
  • நாட்டு தக்காளி நல்ல புளிப்பு சுவை கொடுக்கும். கிடைக்கவில்லை என்றால் பெங்க்ளூர் தக்காளி 1 அல்லது 2 அதிகமாக சேர்க்கவும்.
  • பச்சை மிளகாயை நறுக்க தேவையில்லை. காம்பு மட்டும் நீக்கவும். அதுவே போதுமான காரம் கொடுத்துவிடும்.
  • நெய் அதிகம் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் குறைத்துக்கொள்ளலாம். அல்லது பாதி ரீபைண்ட் ஆயில் சேர்க்கலாம். டால்டா சேர்க்க வேண்டாம். 
  • எலுமிச்சையை அதிகமாக பிழிய கூடாது. லேசாக சாறு வரும்வரை மட்டும் பிழியவும். ஏனென்றால் கசப்பை ஏற்படுத்தும். 
  • வெறும் கொத்தமல்லி இலை, புதினா இலை மட்டும் எடுக்காமல் தண்டும் சேர்க்கவும். அதாவது கொத்தமல்லி (வேரை தவிர),புதினா (கடினமான தண்டு தவிர) கடைசி வரை ஆய்ந்து உபயோகிக்கவும். தண்டும் வாசனை கொடுக்கும் என்பதால்.

தம் போடும் முறை:-
தீயை சிம்மில் வைத்து, அதன் மேலே தோசைகல்லை வைத்து, அதன் மேலே பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடியிட்டு, மூடியின் மேல் தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைக்க வேண்டும்.
இப்படி தான் தம் போடணும். சரியா 5 லிருந்து 10 நிமிடம் வரை சிறுதீயில் இருக்கணும் (அல்லது பாத்திரத்தில் நீர் வற்றியதும் சிர்சிர்ன்னு மெல்லிய சவுண்ட் கேக்கும். அப்ப அடுப்ப அணைச்சுடுங்க). இறக்கியதும் மூடியை திறக்காமல் 10 நிமிடம் கழித்து அல்லது பரிமாறும் போது திறங்க.
*****************
இப்படி இல்லாமல் சிறுதீயில் தோசைகல்லை வைத்து அதன் மேலே பிரியாணி பாத்திரத்தை வைத்து பாத்திரத்தின் வாய் பகுதியில் பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவு கொண்டு அப்பி(பசைபோல் பாவித்து) மூடியிடலாம். இவ்வாறு தான் ஹைதரபாத் பிரியாணி தம் போடுகிறார்கள்.
****************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புடலங்காய் சாதம்



புடலங்காய் சாதம்

தேவைப்படும் பொருட்கள்:

புடலங்காய் : ஒரு கப்
கறிவேப்பிலை : ஒரு கொத்து

பெருங்காயம் : சிறிதளவு

தாளிக்க

கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
(அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்பூன்)
நிலக்கடலை- ஒரு மேசைகரண்டி
வரமிளகாய்-2

அரைக்க:
தேங்காய்-கால் மூடி
மிளகு-கால் ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
கொத்தமல்லி- 2 கொத்து
பூண்டு- முழுதாக

செய்முறை:

புடலங்காயை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். சாதத்தை உதிரியாக வேகவிட்டு எடுக்கவும்.


அரைக்க கொடுத்த பொருட்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளிக்கவும்.


பின் பெருங்காயத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.


பொன்னிறமாக வெங்காயம் மாறியதும் புடலங்காயை சேர்த்து பாதியாக வேகும் வரை மூடிவைக்கவும்.


பின்னர் அரைத்த விழுது,தக்காளி சேர்த்து நன்கு வேகவிடவும்.


நன்கு சுருளும் வரை வதக்கவும்.


பின்னர் சாதத்தை கொட்டி கிளறவும்.


சுவையான புடலங்காய் சாதம் தயார்!

250
4 5


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS