Powered by Blogger.
RSS
Showing posts with label பக்க உணவுகள். Show all posts
Showing posts with label பக்க உணவுகள். Show all posts

இறால் மசாலா

தேவையான பொருட்கள்:
இறால் -அரைகிலோ
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ்- 2 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

வறுத்து அரைக்க:
தனியா- ஒரு கைப்பிடி
வரமிளகாய்-4
பட்டை, ஏலக்காய்,கிராம்பு- 1:2:3
தேங்காய் கால் மூடி

தனியாக அரைக்க
தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
முந்திரி-10

தாளிக்க:
வெங்காயம்-1
கறிவேப்பிலை-1 கொத்து
பச்சைமிளகாய்-3
இஞ்சிபூண்டு விழுது- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
தக்காளி-3
புட் கலர்- சிறிதளவு



 இறால்லை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.



வறுக்க கொடுத்த பொருட்களை தேங்காய் தவிர்த்து மற்றவற்றை வறுத்து, பின் தேங்காய் சேர்த்து நீர் விட்டு மைய்யாக அரைத்துக்கொள்ளவும்.




இறால்லில் அரைத்த விழுதையும் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.




கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் வதக்கவும்.




இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.




அத்துடன் மிளகாய் தூள், புட்கலர், உப்பு, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




இப்போது ஊறிய இறால்லை சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும்.




பாதி வெந்ததும்  தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து மீண்டும் மூடிவிட்டு இறக்கிவிடவும்.





சுவையான இறால் மசாலா தயார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நூனே ஓங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்)

தேவைப்படும் பொருட்கள் :
கத்திரிக்காய்- பத்து
தக்காளி-2
புளி- சிறு நெல்லிக்காய் அளவு
பூடு-பத்து
தேங்காய்- கால் மூடி
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- நான்கு குழிகரண்டி

வறுக்க :
பட்டை- சிறு துண்டு
மிளகு-10
சீரகம்- கால் ஸ்பூன்
மல்லி-2 ஸ்பூன்
நிலக்கடலை- ஒரு கைப்பிடி


தாளிக்க
கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
பூடு
கறிவேப்பிலை
வெங்காயம்

கடாயில் எண்ணெய்விடாமல் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.


நிலக்கடலையை தனியாக வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

.

கத்திரிக்காயின் மேல் பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை கீறிகொள்ளவும். காம்பை நீக்க வேண்டாம்.  மசாலா கலவையை கத்திரிக்காயில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.





கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.

வெங்காம் நன்கு நிறம் மாறியதும் கத்திரிக்காய் கலவையை சேர்க்கவும். அத்துடன் தக்காளி மற்றும் புளியை சேர்த்து மூடி வைக்கவும். சிறுதீயில் வைத்து 5 நிமிடத்திற்கொருமுறை அடிபிடிக்காதவண்ணம் கிளறவும்.
மசாலாவில் நீர் வற்றி,  கத்திரிக்காய் நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வெளியே வரும் பக்குவத்தில் இறக்கிவிடவும். எல்லா வகை குழம்புகளுடனும், சப்பாத்தி,பூரி மற்றும் புலாவ் வகைகளுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
எண்ணெய் கத்திரிக்காய் என்பதை தான் ஆந்திராவில் நூனே ஓங்காய் (நூனொங்காய்) என சொல்வார்கள்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்)

மாமியும் (கணவரின் அம்மா) இப்பலாம் வித்தியாசமா சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க! ஸ்கூல் போக கூடிய தன் பேரபிள்ளைகளுக்கு கொடுத்துவிட நித்தமும் வெரைட்டியாக சமைக்கிறாங்க. சென்னை போயிருக்கும் போது அவர் செய்த சமையலை போட்டோ எடுத்தேன்!  செம டேஸ்ட்டா இருந்துச்சு... உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்....
முட்டை-10
கொத்தமல்லி,புதினா, கறிவேப்பிலை- சிறிதளவு
சின்ன வெங்காயம்-20
தக்காளி-3
இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
எண்ணெய்- ஒரு குழிகரண்டி
கடுகு.உளுந்து- சிறிதளவு
உப்பு-தேவைக்கு





முட்டைகளை அவித்து மேல்பகுதியில் கால்பகுதியளவுக்கு மட்டும் கீறிவைக்கவும். இது மசாலா உள்ளே சேர வைக்கும்.


சின்னவெங்காயம் அரைத்துவைக்கவும். இஞ்சிபூண்டு தனியாக அரைத்து வைக்கவும். தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தமல்லிபுதினா ஆய்ந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து தாளித்து பின்னர் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பின் வெங்காய விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் இஞ்சிபூண்டுவிழுது சேர்க்கவும்.




பச்சைவாசனை போனதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.




தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.




அவித்த முட்டைகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலா சேரும் வரை  அடுப்பில் வைத்திருக்கவும்.



விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடலாம். 5 நிமிடங்கள் கழித்து மசாலா ஒரு சேர வந்ததும் இறக்கி பரிமாறவும்.




அவிச்சமுட்டை கிரேவி தயார்.
சாதத்தில் பிரட்டி சாப்பிடவும், சாம்பார்,ரசம், புளிகுழம்பு வகைகளுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மாசி தொக்கு

தேவையான பொருட்கள்:

  • மாசித்தூள் - 3 டீஸ்பூன்

  • பெரிய  வெங்காயம் - 100 கிராம்

  • பழுத்த தக்காளி - 100 கிராம்

  • பச்சை மிளகாய் - 1

  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • எண்ணெய் -ஒரு குழிகரண்டி

  • கடுகு,உளுந்து - தலா அரைடீஸ்பூன்

  • கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது

  • உப்பு - தேவைக்கு




மாசி கருவாட்டு துண்டை அம்மியில் பொடித்துக் கொள்ளவும்.






வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியையும் பச்சைமிளகாயும் நறுக்கிக்கொள்ளவும்.




கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து சேர்த்து வெடிக்கவிடவும்.




பின்னர் கறிவேப்பிலை பச்சைமிளயா சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.




வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.


பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர்  சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் இறக்கவும்.



சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட் டிஸ்









ஆசியா ஒமர் அவர்களின் மாசிபிரட்டல் குறிப்பை பார்த்து செய்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெங்காய பாவற்காய் பொரியல்



செய்முறையை விளக்கப்படத்துடன் காண அறுசுவை பார்க்கவும்

பாட்டியின் சமையல் இது ;-) கசப்பு தெரியாது இந்த முறையில் செய்யும் போது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க (7 வயசுல இருந்தே இதை சாப்பிட்டிருப்பதால் சொல்கிறேன் ;-)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெண்டைக்காய் புளிகறி/ வெண்டைக்காய் மண்டி


 தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்- 100 கிராம்
புளி -ஒரு நெல்லிகாய் அளவு (ஊற வைத்தது)
தக்காளி-2
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
பூடு-முழுதாக ஒன்று
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கடுகு, ஊளுந்து,கடலைபருப்பு-1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-கால்ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
சாம்பார் பொடி-2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- ஒரு குழி கரண்டி
 வெண்டைக்காயை  சுத்தம் செய்து நீரை துடைத்து விட்டு 2 இன்ச் அளவுக்கு வெட்டவும். அதை  வாணலியில் சிறிது  எண்ணெய் விட்டு 5 நிமிடம் வதக்கவும். இதன் மூலம் பிசிபிசிப்பு தன்மை ஓரளவுக்கு நீங்கும் :-)
 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, கடலைபருப்பு தாளிக்கவும். கடுகு வெடித்து முடித்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உரித்த பூடுகள் சேர்த்து வதக்கவும்
 பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். குழைந்ததும் வதக்கிய வெண்டிக்காயை சேர்க்கவும்.
 அதன் பின்னர் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்
 மசாலா ஒன்றோடொன்று சேர்ந்ததும் புளி கரைசலை சேர்த்து வேகவிடவும்.
 மசாலா நீர் பாதியாக வற்றி சுருண்டதும் இறக்கிவிடவும்.

வெண்டைக்காய் புளிக்கறி (வெண்டைக்காய் மண்டி) தயார். வெரைட்டி ரைஸ், சாம்பார் சாதம் உடன் அருமையாக இருக்கும். மிக முக்கியமாக பழைய கஞ்சிக்கு சூப்பர் காம்பினேஷன். சுண்ட வச்ச குழம்பு இல்லையென்று நினைப்பவர்களுக்கு உடனடியாக இப்படி செய்து கொடுத்து அசத்தலாம் :-) 

குறிப்பு- புளியை நீரில் ஊற வைப்பதற்கு பதில் அரிசி கலைந்த நீரில் ஊற வைத்து உபயோகித்தால் இன்னும் சுவை கூடும். வீட்டுல மண்சட்டி இருந்தா மிஸ் பண்ணாதீங்க. அதுல செஞ்சா இன்னும் கிராமிய மணமும், மண் வாசனையும்  சேர்ந்து  கூடுதலா 2 கோப்பை கஞ்சி உள்ளே போகும் :-))

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS