தேவையான பொருட்கள்
சாதம்- ஒரு கப்
வெங்காயம்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பச்சைமிளகாய்-3
கொத்தமல்லி- சிறிதளவு
வெள்ளைபூடு-10
தேங்காய்- கால்மூடி
வரமிளகாய்-2
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
எண்ணெய்- 4 ஸ்பூன்
வெங்காயம்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பச்சைமிளகாய்-3
கொத்தமல்லி- சிறிதளவு
வெள்ளைபூடு-10
தேங்காய்- கால்மூடி
வரமிளகாய்-2
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
எண்ணெய்- 4 ஸ்பூன்
தாளிக்க
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைபருப்பு
நிலக்கடலைபருப்பு-விரும்பினால் மட்டும்
வெங்காயம், கொத்தமல்லி, பூடு, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நான்காக நறுக்கிக்கொள்ளவும்.
தேங்காயை துருவிக்கொள்ளவும். அல்லது நீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களுடன் பூடு, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
வாசனை மாறியதும் கறிவேப்பிலை, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பெருங்காயத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடங்கள் மட்டும் வதக்கிவிடவும்.
தீயை அணைத்துவிட்டு சாதம் கொட்டி கிளறவும்.
காரமான கிரேவி வகைகள், தாளிச்சா, பொரியல் வகைகள், வறுத்த மீன், சிக்கன் 65 முதலியவை நல்ல காம்பினேஷன் :-)